தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 867 people in Tamil Nadu today
3.1.2021
தமிழகத்தில் இன்று கொரோனா பரவல் மேலும் குறைந்தது. இன்று 867 பேருக்குத்தான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இன்று மேலும் குறைந்துள்ளது. அதாவது 900க்கும் கீழே வந்துள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 867 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,20,712 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி
சென்னையில் இன்று ஒருநாளில் 236 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,26,234-ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 49 பேர், கோவையில் 69 பேர், நெல்லையில் 14 பேர், தென்காசியில் 8 பேர், தத்துக்குடியில் 9 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இல்லை.
10 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 10 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,156 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவுக்கு இறந்தவர்களில் சென்னையில் 5 பேர், திருவள்ளூர், கோவை, தர்மபுரி, ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்குவர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,002 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,429 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 8,127 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.