June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இறந்தவர் உடலை தகனம் செய்தவர்கள் 17 பேர் சாவு

1 min read

Seventeen people were killed in cremated

3.1.2021

இறந்தவரின் உடலை செய்தபோது தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து 17 பேர் இறந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியில் வசித்துவந்த ராம்தான் என்பவர் இறந்தார். அவருக்கு இறுதி சடங்கு நடந்தது உடலை தகனம் செய்வதற்காக முரத்நகரில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சயில் 50க்கும் அதிகமானோ£ர் கலந்து கொண்டனர்.

சுடுகாட்டில் ராம்தானின் உடலை தகன மேடையில் வைத்தனர். அங்கும் சடங்கள் நடத்தி உடல் தகனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது மழை கொட்டியது. இதனால் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் தகன மேடை அமைந்துள்ள பகுதிக்கு வந்து நின்றுகொண்டிருந்தனர். அந்த தகன மேடையின் மேற்கூரை பாழடைந்து இருந்தது, அதில் புனரமைப்பு நடைபெற்று பாதிப்பணிகள் முடிவந்த நிலையில் இருந்துள்ளது.

17 பேர் சாவு

கனமழை காரணமாக அந்த தகன மேடையின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த ராம்தானை தகனம் செய்ய வந்து மழை காரணமாக தகன மேடையில் நின்றுகொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த நபரை தகனம் செய்ய சென்றவர்கள் தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்தத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.