தவறான கேள்வி இடம்பெற்ற குரூப்-1 தேர்வை ரத்து செய்ய காங். கோரிக்கை
1 min read
Cong to cancel Group-1 selection featuring incorrect question. Request
1.1.2021
சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தவறாக பல கேள்விகள் கேட்கப்பட்டதால் அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கோரிக்கை மனு
கடந்த 3-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடந்தது. இதில் பல கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாகவும் எனவே அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மாரிகுமார் தமிழ்நாடு மேலிட பார்வையாளர் அஜய்குரியகோஸ் ஆகியோர் தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் மாணவர் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து உள்பட பலர் தமிழக முதல் அமைச்சருக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் மூலம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தவறான கேள்வி
தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் பணிக்கான தகுதி தேர்வு எழுதும் போது பல்வேறு வகையான சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதி நடந்தது.
இந்த தேர்வில் 12க்கும் மேற்பட்ட கேள்விகள் விடையளிக்க முடியாமல் தவறுதலாக இருந்தது தெரிய வருகிறது. மேலும் வகுப்புவாதம் பிரிவினைவாதம் போன்ற சமூக நல சிந்தனை அற்ற சில கேள்விகளும் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு தவறான கேள்விகள் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை அல்ல. அரசு நடத்தி வரும் ஒவ்வொரு தகுதித் தேர்விலும் இதுபோன்ற தவறான கேள்விகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கிறது. இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் பங்கு பெற்ற இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை மாற்றி அமைக்கும் சில கேள்விகளும் இடம் பெற்றிருந்தது என்பது மிகுந்த வேதனைக்கு உள்ளாக்குகிறது.
TNPSC — வெளியிட்ட தவறான பதில்கள்
39)தமிழகத்தில் அணைத்து மாவட்டங்களிலும் காணப்படும் மண் – செம்மண். (TNPSC WRONG KEY – கரிசல் மண்)
16) பஞ்சாபி மொழி பாரசீகம் மற்றும் உருது மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது . (TNPSC Wrong Key – – இந்தி மற்றும் உருது) –
62) சிலிக்கான் நிரந்தரமாக செயல் இழைக்கும் வெப்பநிலை 250 degree “C”( But TNPSC answer 150 degree “C” இதற்கு TNPSC – விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்)
81) நீல் சத்யாகிரக போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி -ALL ANSWERS ARE WRONG –
(CORRECT ANSWER-கடலூர் அஞ்சலை அம்மாள் – தனது மகளுடன் கலந்து கொண்டு சிறைக்கு சென்றார் .
மகாத்மா காந்தி சிறையில் சென்று அஞ்சலை அம்மாள் அவர்களை சந்தித்து “தென்னிந்தியாவின் ஜான்சி ராணி” என்று புகழ்ந்தது வரலாறு. (TNPSC Answer Key- பத்மாசனி அம்மாள். பத்மாசனி அம்மாள் அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. மாறாக போராட்டத்திற்கு தனது கொலுசினை அடகு வைத்து உதவினார் என்பது மட்டுமே வரலாறு. நான் கூறுவது தவறு என்றால் தனது விளக்கத்தினை TNPSC தேர்வர்களுக்கு தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்)
…Chronological order of Gandhiji’s protest – all answers are wrong
151) நாடாளுமன்ற அமைச்சரவை நீடிப்பது ஜனாதிபதி ஆளுமையால் – (அரசியல் அமைப்பு விதி எண் 75) – (TNPSC wrong answer பிரதம மந்திரியால் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது -Council of ministers hod the office during the pleasure of president not by prime minister)
79 )நாகரிகம் பற்றிய தந்தை பெரியாருடைய கூற்று எது அல்ல? தான் கொண்ட நன்மைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்வது – rying for others also to get whatever good one has got(TNPSC key – Progress based on scientific invetions) – Source – – கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட பெரியார் ஆயிரம் வினா விடை புத்தகம் (Page no. 124 & 151)
மேற்காணும் பதில்களில் தவறுள்ளது போக…..கேள்விகளில் தவறு என்று TNPSC அமைப்பே ஒத்துக்கொண்டது
38 ) இந்தியாவில் உள்ள ரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை – அணைத்து விடைகளும் தவறு
107 ) TNPSC என்பதற்கு பதிலாக Mesolithic என்று குறிப்பிட்டது
139 ) பீகார், மத்திய பிரதேஷ் , ராஜஸ்தான் , உத்திர பிரதேஷ் மக்கள் தொகை தொடர்பான கேள்வி
78 ) திராவிட பாண்டியனை – திராவிட பண்டிதன் என்று குறிப்பிட்டது
இவ்வளவு தவறுகளை வைத்துக்கொண்டு – முதல்நிலை தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைகளை (Revised key for Preliminary exam)- முதல்நிலை, முதன்மை , நேர்முகத்தேர்வு என்று அணைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர்தான் வெளியிடுவோம் என்று கூறுவது தேர்வர்களை முட்டாளாக்கும் செயலாக தெரிகிறது. கொரோனா காலத்திலும் 8 மாதங்களாக பொறுத்திருந்து இந்த தேர்வினை எழுதிய ஒன்றரை லட்சம் தேர்வர்களின் வாழ்க்கையில் விளையாடக்கூடாது.
தபால் துறை
மத்திய அரசு தபால் துறை பணியாளர்களுக்கான தேர்வில் தமிழ்மொழியில் கேள்விகள் இடம் பெறவில்லை. மத்திய அமைச்சரகம் தபால் துறை பணியாளர்கள் தேர்வில் தமிழ்மொழியில் கேள்விகள் இடம்பெறும் என்று அறிவித்திருந்தது. மத்திய அரசு அறிவித்து இருந்ததற்கும் தேர்வு நடைமுறைக்கும் முரண்பாடாக உள்ளது. தமிழக அரசின் காவல் துறையில் உதவி ஆய்வாளர் தகுதி தேர்வு பயின்று வருபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முன்னுரிமை கடந்த சில வருடங்களாக சரிவர திட்டமிட்ட முறையில் வழங்கப்படவில்லை.
இதுபோன்ற தவறான தேர்வு முறையை ரத்து செய்து நியாமான முறையில் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றவகையில் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகளை நடத்தி சிறந்த பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இன்னல் நடைமுறைகளை நீக்க வேண்டும் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும் காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்
கலெக்டர் சமீரனிடம் மனுவை கொடுக்கும்போது தென்காசி மாவட்ட துணை தலைவர் ராம்மோகன், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜி.எம்.கணேசன், தென்காசி நகர இளைஞர் அணி தலைவர் சந்தோஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.