June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 15,968 people in a single day in India

13.1.2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் குணமாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( செவ்வாய்க்கிழமை ) மட்டும் 15,968 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 95 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 202 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,529 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 17,817 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,29,111 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு 2,14,507 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 18 கோடியே 34 லட்சத்து 89 ஆயிரத்து 114 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று ஒருநாளில் மட்டும் 8,36,227 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.