June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 15,590 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 15,590 people in a single day in India

15.1.2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,590 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவல் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில், 15,590 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவல் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 52 லட்சத்து 7 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்டு மாதம் 7&ந் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்டு 23&ந் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5&ந் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16ந் தேதி 50 லட்சத்தையும் செப்டம்பர் 28ந் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் மாதம் 11ந் 70 லட்சத்தையும், அக்டோபர் 29ந் தேதி 80 லட்சத்தையும் நவம்பர் 20ந் தேதி 90 லட்சத்தையும் டிசம்பர் 19ல் ஒரு கோடியையும் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரேநாளில் நாடுமுழுவதும் 191 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாட்டில் இதுவரை கொ£ரோனவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 918 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சதவீதம் 1.44 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 15,975 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1 கோடியே 1 லட்சத்து 62 ஆயிரத்து 738 பேர் குணமாகி டிஜ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோ£னவில் இருந்து குணம் அடைந்தவர்கள் சதவீதம் 96.5 அதிகரித்துள்ளது.

தற்போது 2 லட்சத்து 13 ஆயிரத்து 27 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனவுக் சிகிச்சை பெறுகின்றனர். இது மொத்த எண்ணிக்கையில் 2.02 சதவீதம் ஆகும்.

பரிசோதனை

ஐசிஎம்ஆர் தகவல்படி, நேற்று மட்டும் 7 லட்சத்து 30 ஆயிரத்து 096 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதன் மூலம் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 18 கோடியே 49 லட்சத்து 62 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 191 பேரில் 70 பேர் மராட்டிய மாநிலத்தையும்,19 பேர் கேரளாவையும், 17 பேர் மேற்கு வங்காளத்தையும், 14 பேர் உத்தரபிரதேசத்தையும், 10 பேர் சத்தீஷ்கரையும், 10 பேர் பஞ்சாபையும், 8பேர் மத்திய பிரதேசத்தையும், 6 பேர் அரியானாவையும், 4 பேர் தமிழகத்தையும், 4 பேர் ஆந்திராவையும், 4 பேர் டெல்லியையும் சேர்ந்தவர்கள்.

மொத்த உயிரிழப்புகளில் 1,51,918 பேரில் மராட்டியதில் 50,291 பேரும், தமிழகத்தில் 12,246 பேரும், கர்நாடகாவில் 12,155 பேரும், டெல்லியில் 10,722 பேரும், மேற்கு வங்கத்தில் 10,010 பேரும், உத்தரபிரதேசத்தில் 8,543 பேரும், ஆந்திராவில் 7,138 பேரும், பஞ்சாபில் 5,473 பேரும் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.