June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கோவில்பட்டியில் 2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை கொன்ற பெண்

1 min read

The woman who killed her husband who tried to get married for the 2nd time in Kovilpatti

23.1.2021

கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவனை வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு(வயது 38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி உமா மகேஷ்வரி(30). இவர்களுக்கு ஆதிசிவன்(7), காவியாஸ்ரீ (4) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.
பிரபு அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வார். வழக்கம்போல் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவிலும் குடித்துவிட்டு தகராறு செய்தார். கணவர்&மனைவி இடையே வாக்குவாதம் முற்றியது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில்தான் உமா மகேஷ்வரி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரபுவை வெட்டினார். இதில் படுகாயமடைந்த பிரபு வீட்டில் இருந்து ரத்த வெள்ளத்தில் வெளியே ஓடி வந்தார் சிறிது நேரத்தில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதனை அடுத்து உமா மகேஷ்வரி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் மகேஷ்வரியை கைது செய்தனர் மேலும் பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட உமா மகேஷ்வரி கணவரை கொன்றது குறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது உமாமகேஷ்வரி கூறிய தகவல்களை போலீசார் தெரிவித்தனர்.-

2வது திருமணத்திற்கு முயற்சி

பிரபுவிற்கு மனைவி குழந்தைகள் இருந்தாலும் வேறு பெண் ஒருவருடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகத்தான் கணவன்-&மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், தான் தொடர்பு வைத்துள்ள பெண் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், எனவே அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பிரபு கூறியுள்ளார். இதற்கு உமாமகேஷ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று தனது கணவரின் காலை பிடித்து கெஞ்சினார். ஆனால் பிரபு எதையும் கண்டுகொள்ளாமல் திருமணம் செய்வேன் என்று உறுதியாக கூறினார். நேற்றிரவும் இதே பிரச்சினை காரணமாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
பின்னர் உமா மகேஷ்வரி அருகில் இருந்த அறையில் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு, அவர் மட்டும் தூங்காமல் இருந்துள்ளார். அதன்பிறகு அவர் தூங்கி கொண்டு இருந்த தனது கணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போதுதான் வெளியில் ஓடி வந்து பிரபு இறந்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.