“ஒரே மொழி, ஒரே கலாசாரம் முயற்சி எதிர்த்து போராட வேண்டும்;” கோவையில் ராகுல்காந்தி பிரசாரம்
1 min read“One language, one culture must fight the effort;” Rahul Gandhi campaign in Coimbatore
23.1.2021
பிரதமர் மோடியின் ஒரே மொழி, ஒரே கலாசாரம் முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று ராகுல்காந்தி கோவையில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் பேசினார்.
ராகுல்காந்தி
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் அரசியில் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., தி.மு.க உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன.
இப்போது காங்கிரஸ் கட்சியில் களத்தில் இறங்கி உள்ளது. அதன் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி எம்.பி. இன்று தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்கினார். ஏன்கனவே அவர் பொங்கல் பண்டிகையன்று மதுரை வந்த அவர் அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
அதனை அடுத்து இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
ராகுல்காந்தி இன்று காலை கோவை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கினார். அவர் கூறியதாவது:
போராட வேண்டும்
தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று.
ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.