May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 454 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 454 people in Tamil Nadu today

17.2.2021
தமிழகத்தில் இன்று 454 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) 51 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பதிவு குறைந்தது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றிய தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:–&
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) 454பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,46,480ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 255 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 52,350 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 69 லட்சத்து19 ஆயிரத்து 170 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்வர்களில் ஆண்கள் 271 பேர். பெண்கள் 183 பேர். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,11,524. பெண்களின் மொத்த எண்ணிக்கை 3,34,921. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35.
தமிழகத்தில் இன்று மட்டும் 462 பேர் கொரோனவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 29 ஆயிரத்து 850ஆக உள்ளது.

6 பேர் பலி

தமிழகத்தில்இன்று மட்டும் கொரோனாவுக்க 6 பேர் இறந்துள்ளனர். அதவாது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பேரும், சென்னை, திருவள்ளூர், விருதுநகர், திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,438 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4,192 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வருகிறார்கள்.

நெல்லை

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் சென்னை 120 பேரும் கோவையில் 54 பேரும் நெல்லையில் 5 பேரும், தென்காசியில் 2 பேரும், தூத்துக்குடியில் 2 பேரும் அடங்குவர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.