தென்காசியில் டீ க்கடைக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி
1 min read
Edappadi Palanisamy who went to a tea shop in Tenkasi
18.2.2021
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார். தென்காசி மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று (வியாழக்கிழமை) ராதாபுரம் தொகுதியில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய ஊர்களில் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடையே பேசினார்.
முன்னதாக தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அதிமுக இளைஞர் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
டீ குடித்தார்
பின்னர் அங்கிருந்து பாவூர்ச்சத்திரம் செல்லும் வழியில் மகிழ்வண்ணநாதபுரத்தில் சாலையோரத்தில் டீக்கடையை பார்த்த அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு டீக்கடையில் அமர்ந்து டி குடித்தார்.
டீ மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருப்பதாகக் கூறிப் பாராட்டுத் தெரிவித்தார்
பாவூர்சத்திரத்தில் முதல்அமைச்சர் பழனிசாமி பேசும் போது, “நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்பவர்கள் விவசாயிகள் . கிராமப்புறத்தில் 2.5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது” என கூறினார்.
பாளையங்கோட்டை
முன்னதாக இன்று காலை நெல்லை மாவட்ட எல்லையான பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வள்ளியூர் சென்ற அவர் பழைய பஸ் நிலையம் முன்பு திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.