May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் பலி

1 min read

Security forces killed 4 Maoists in a bomb attack

23.3.2021

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.

வெடிகுண்டு தாக்குதல்

சத்தீஷ்கர் மாநிலம் நாரயண்பூர் மாவட்டத்தில் மாவட்ட ரிசர்வ் போலீசார் 27 -பேர் சென்ற பேருந்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தையடுத்து நிகழ்விடத்திற்கு கூடுதல் படைகள் விரைந்துள்ளன. காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.