தமிழகத்தில் எந்த தொகுதியிலும் தேர்தல் ரத்து இல்லை; – தலைமை தேர்தல் அதிகாரி
1 min read
There is no cancellation of elections in any constituency in Tamil Nadu; – Chief Electoral Officer
5/4/2021
தமிழகத்தில் எந்த தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்படவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சில தொகுதிகளில் தேர்தல் செலவின பொறுப்பாளர்கள் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்படி, கொளத்தூர், திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அந்த தகவலில் உண்மையில்லை. எந்த தொகுதியிலும் தேர்தல் ரத்து இல்லை. திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடத்துவற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. பதற்றமான மிகவும் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.