பிலவ ஆண்டு எப்படி இருக்கும்?
1 min readWhat will the Tamil year be like?
ஒவ்வொரு தமிழ் ஆண்டுக்கும் ஒவ்வொரு பாடல்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் பிலவ ஆண்டுக்கான பாடல் வருமாறு:
பிலவத்தில் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்
சலமிகுதி துன்பம் தருக்கும் நலமில்லை
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை
பாலுமின்றிச் செய்புவனம் பாழ்
இதன் பலன் என்னவென்றால் …
பிலவ வருடத்தில் குறைந்த அளவு மழை பெய்யும். நோய்கள் அதிகரிக்கும். பொய், சூதுவாது அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் மக்கள் துன்பம் அடைவர். நலமற்ற வாழ்வு உண்டாகும். நாலுகால் பிராணிகள் நோயால் நாசமடையும். வேளாண்மை குறையும். பசுகளுக்கு நோய் வரும் என்பதால் பால் உற்பத்தி குறையும்.