இந்தியாவில் ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 2,61,500 people in one day in India
18/4/2021
இந்தியாவில் ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரே நாளில் 1,501 பேர் கொரோனாவுக்கு பலினார்கள்.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த மாத தொடக்கம் முதல் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்நிலையில் இன்று காலை இந்திய அளவில் கொரோனா பரவல் பற்றிய விவரங்கைள மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் புதிதாக 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,501 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,38,423 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.