தமிழகத்தில் 9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா
1 min readCorona has crossed 9 thousand in Tamil Nadu
17.4.2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 9 ஆயிரத்தை கடந்தது.
17.4.2021
தமிழகத்தின் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 9,344 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 263 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 1 லட்சத்து 804 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 5,679 பேர் ஆண்கள், 3,665 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,92,042 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,88,650 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,263 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 2 ஆயிரத்து க்ஷ22 ஆக உள்ளது. மாநிலத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 39 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 22 பேர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், சேலம், கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், கோவை, கடலூர், காஞ்சிபுரம், வேலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,071 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 65,635 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில்…
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,341 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,23,354 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 16,79,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 11,99,37,641 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.