June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ரெயில்கள் தொடர்ந்து இயங்கும்

1 min read

Trains will continue to run in Tamil Nadu

17.4.2021

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படுமா? என பல்வேறு தரப்பினரிடையே கேள்வி எழுந்தது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கூறியதாவது:-

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசிடம் இருந்து தெற்கு ரெயில்வேக்கு, ரெயில்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை வரவில்லை. எனவே தமிழகத்தில் தற்போது இயங்கும் அனைத்து ரெயில்களும் முழுமையாக இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

=

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.