May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 10,941 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 10,941 people in Tamil Nadu today

19.4.2021

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தாக்கம் கடந்த மாதம் முதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் வருமாற:-

தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,02,392 ஆக அதிகரித்துள்ளது.

44 பேர் சாவு தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இதில் சென்னையில் 15 பேர், செங்கல்பட்டில் 6 பேர், கடலூர், காஞ்சிபரம் மாவட்டங்களில் தலா 3 பேர், கன்னியாகுமரி, திருநெல்வேரி, மதுரை, சேலம், தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், கோவை, தென்காசி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,157 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 6,172 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,14,119 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 75,116 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென்காசி

சென்னையில் இன்று மேலும் 3,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலியில் 286 பேருக்கும், தென்காசியில் 162 பேருக்கும், தூத்துக்குடியில் 288 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

இந்திய அளவில்

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,61,919 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 1,44,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,29,329 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.