தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா உறுதி
1 min read
Corona confirmed 11,681 people in Tamil Nadu today
21.4.2021
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று புதிதாக 11,681 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்து வரகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவலகள் வருமாறு:&
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று( புதன்கிழமை) புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது.
53 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் 53 பேர் கொரோனாவுக்குஇறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,258 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 7,071 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,27,440 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 84,361 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் இன்று மேலும் 3,750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய அளவில்…
இந்தியாவில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. நேற்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகி இருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 2,023 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது.