June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்;பிரதமர் மோடி உத்தரவு

1 min read

To increase oxygen production; Order of Prime Minister Modi

22.42021
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் ஆக்சிஜன் வினியோகம் மற்றும் கையிருப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:&

ஆக்சிஜன் தேவை

ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். அப்போது, மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு மற்றும் ஆக்சிஜன் சப்ளை குறித்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
தற்போது, 20 மாநிலங்களுக்கு தினமும், 6,785 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அந்த மாநிலங்களுக்கு தினமும் 6,822 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக, தனியார் மற்றும் அரசு சார்ந்த தொழிற்சாலைகள், ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மூலம் தினமும் 3,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பு வைக்கப்படுகிறது.

அத்தியாவசிய தேவைகளுக்கு…

அத்தியாவசியமில்லாத தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை ஆக்சிஜன் மையங்களை செயல்பாடு தொடர்பாக மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
அப்போது பிரதமர் மோடி, “பல திசைகளில் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். விநியோகிக்கும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சுகாதார அமைப்புகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்தில் புதுமையான முறைகளை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்தார். மேலும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை சுமூகமாக நடக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உள்துறை உத்தரவு

தடுக்க கூடாது

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:&

மருத்துவமனைகளுக்கு தங்கு தடையில்லாமல் ஆக்சிஜன் கொண்டு வர வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அதன் காரணமாக, ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது. மருத்துவ தேவைகளுக்காக வாகனம் செல்லும் போது, தடுத்து நிறுத்தி சோதனை என்ற பெயரில், மணிக்கணக்கில் நிறுத்தி வைக்காமல், வாகனம் சுலபமாக செல்ல வேண்டிய வழியை உருவாக்கி தர வேண்டும். எந்த அதிகாரியும் ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தக்கூடாது ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்கள் விரைந்து செல்வதை அனைத்து மாநில தலைமை செயலர்கள் உறுதிபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில், தலைமை செயலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.