தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
1 min read
2 lakh Govshield vaccines arrive in Tamil Nadu
சென்னை, ஏப்.24-
புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.
தடுப்பூசிகள்
இந்தியா முழுவரும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல் தேவைப்படுபவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பணம் கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இந்த நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசி வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
2 லட்சம் தடுப்பூசி
இந்த நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.
இதன் மூலம், தமிழகத்திற்கு இதுவரை 55 லட்சத்து 3 ஆயிரத்து 590 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. 8,82,130 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் 2 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வர உள்ளது.