May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஞாயிற்றுக்கிழமைகளில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது

1 min read

Train ticket booking centers do not operate on Sundays

23.4.2021

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களை இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவு

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன் லைன்

தமிழகத்தில் ஏப்ரல் 25-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாள்களில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது. எனினும், ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு மற்றும் ரத்து செய்து கொள்ளலாம். முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கும் மையங்கள் வழக்கம் போல் செயல்படும்.
இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.