தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு
1 min readChance of light rain with thunder and lightning in 16 districts of Tamil Nadu
23/4/2021
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
16 மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 27-ந் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும்,சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.