June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அரியானாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 5 பேர் சாவு

1 min read

Five corona patients die due to lack of oxygen in Haryana

26.4.2021
அரியானா மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் 5 பேர் இறந்தனர்.

ஆக்சிஜன்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நாட்டில் உள்ள மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல முன்னணி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

ஆனாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் 50 பேர் இறந்துள்ளனர். பஞ்சாபில் 5 பேர் இறந்தனர்.

அரியானாவில் 5 பேர் சாவு

இந்த நிலையில், அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நோயாளிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரியானாவில் நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக நேற்று முன்தினம் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 3 பேர் உயிரிழந்தனர். அதேபோல், ரேவேரியில் உள்ள மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றிய விசாரணைக்கு மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.