தமிழகத்தில் கொரோனா குறைந்தாலும் நெல்லை, தென்காசியில் சாவு அதிகரிப்பு
1 min read
Death increase in Nellai and Tenkasi despite declining corona in Tamil Nadu
5.6.2021
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் நெல்லை, தென்காசியில் சாவு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
தமிழக கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 21,410 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,16,812 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 11,652 பேர் ஆண்கள், 9,758 பேர் பெண்கள்.
இன்று 32,472 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,32,778 ஆக உயர்ந்தது.
463 பேர் சாவு
இன்று கொரோனாவுக்கு 463 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து, வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,571 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் சென்னை 1789, கோவை 2663, ஈரோடு 1569, சேலம் 1171, திருப்பூர் 1104, தஞ்சாவூர் 929 பேர் என கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி
நெல்லையில் 272 பேருக்கு கொரோனா தொற்று இன்று கண்டறியப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 291 பேர் பாதிக்கப்பட்ட நிலையல் 11 பேர் இன்று இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 358பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் 5 பேர் இறந்துள்ளனர்.
நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கு குறையவில்லை. தென்காசியில் இன்று 11 பேர் இறந்துள்ளனர். அதற்கான காரத்தை அரசு ஆராய வேண்டும். தென்காசி புதிய மாவட்டம். அங்கு போதிய வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.