June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்திடம்சிக்கியகள்ளநோட்டு-நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kananayiram-Kalla notu- story by thabasukumar

14.6.2021 கடலூரில்கண்டக்டரிடம்அறுபதுரூபாய் சில்லறை வாங்கிய கண்ணாயிரம் தனதுநண்பரைசந்திக்க நடந்து சென்றார். கடைவீதியில் உள்ள நண்பரின் கடையை தேடினார். அந்த கடை பூட்டிக்கிடந்தது. பக்கத்து கடையில் விசாரித்தார். ஊரடங்கின்போது கடையை பூட்டிவிட்டு ஊருக்கு சென்றவர் இன்னும் வரவில்லை என்று தெரிவித்தனர். உடனே கண்ணாயிரம் ஏமாற்றத்துடன் பஸ்நிலையத்தை நோக்கிசென்றார். இனி என்ன செய்வது புதுச்சேரிக்கு புறப்படவேண்டியதுதான் என்று நினைத்தார். ஏற்கனவே தான்புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்த தனியார் பஸ் வந்து நின்று கொண்டிருந்தது. எல்லோரும்வேகமாக ஏறினார்கள். அந்த பஸ்சில்ஏறலாமா வேண்டாமா என்றுபலமுறையோசித்தார். வேறு பஸ்எதுவும் நிற்கிறதா என்று பார்த்தார். இல்லை. எனவே அதில்தான் ஏற வேண்டும்.

சில்லறை பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக இரண்டு பத்துரூபாய் நோட்டுகளை கால்சட்டை பையிலிருந்து எடுத்து மேல்சட்டைபையில் வைத்துக்கொண்டார். கண்டக்டர் டிக்கெட் என்று கேட்டதும் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துகண்ணாயிரம் கொடுத்தார்.கண்டக்டர் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கிமேலும் கீழும்பார்த்தார். ஒருநோட்டை பார்த்து ம்…… இது செல்லாது நடுவுல கிழிஞ்சிருக்கு ஒட்டியிருக்கு வேற நோட்டுகொடுங்க என்றார். கண்ணாயிரம்துடித்து போய்விட்டார். என்ன செல்லாதா உங்க பஸ் கண்டக்டர்தானே இந்த பத்துரூபாய்நோட்டைகொடுத்தாரு.மறுபடிஏன் செல்லாது எனகிறீங்க என்றார். கண்டக்டர் கோபத்துடன், நான் கொடுத்தேனா இல்லையே, வேறுநல்லநோட்டுகொடுங்க என்றார். கண்ணாயிரம் முகத்தை துடைத்தபடி உங்க பஸ்சிலேதானே வாங்கினேன். கொஞ்சம் பார்த்து கவனிக்க கூடாது என்றார். கண்டக்டர் ஆத்திரத்தில் ஏன்யா, கோபத்தை கிளப்புற புதுபத்து ரூபாய்நோட்டு இருந்தா எடு இல்லைன்னா இறங்கி என்றார். கண்ணாயிரம் கண்கலங்கினார். நாம எங்குபோனாலும் பிரச்சினை துரத்துது. அந்த கண்டக்டருக்கிட்ட சில்லறை பாக்கிகேட்டதற்காக செல்லாதபத்து ரூபாய்நோட்டைநம்தலையில்கட்டிவிட்டான் என்றுபுலம்பினார்.
என்ன செய்வது வேறுவழி இல்லை. செல்லாத பத்து ரூபாய் நோட்டைவாங்கி மேல் சட்டை பையில் வைத்தார். பின்னர் கால்சட்டை பையிலிருந்து வேறு ஒரு பத்து ரூபாயை எடுத்தார். இருபது ரூபாயாக மீண்டும் கண்டக்டரிடம் கொடுத்தார்.அந்த இரண்டு நோட்டுகளை யும் நன்றாக பார்த்துவிட்டு டிக்கெட்டை கிழித்து கண்ணாயிரத்திடம் கொடுத்தார்.அதை வாங்கி கால்சட்டை பையில் பத்திரமாக வைத்தார். பின்னர்ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினார். கண்டக்டர் டிக்கெட் போட்டுவிட்டு கீழே இறங்கி சென்றார். டிரைவரும் பஸ்சைவிட்டு இறங்கி நின்றார். ஏற்கனவே நின்று கொண்டிருந்த புதுச்சேரி பஸ் மெல்ல புறப்பட்டது. அந்த பஸ்புறப்படாது என்று நினைத்து இந்த பஸ்சில் ஏறியவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தால் அந்த பஸ்சில் சென்றிருக்கலாம் என்று எண்ணினர்.டிரைவரைபார்த்து ஏங்க உங்களுக்கு முன்னாலே வந்த பஸ் புறப்பட்டு போயிட்டு நீங்க டிக்கெட் போட்டுவிட்டு இன்னும் பஸ்சை எடுக்கலை என்று சத்தம் போட்டனர். உடனே டிரைவர் வேகமாக பஸ்சில் ஏறி பஸ்சைஸ்டார்ட் செய்தார். பஸ்நிலையத்தை விட்டு பஸ் நகர தொடங்கியது. கண்டக்டர் வரவில்லை என்று கண்ணாயிரம் உரத்த குரலில் கூறினார். எல்லோரும் அவரை திரும்பி பார்த்தனர். பஸ் டிரைவர் பஸ்நிலையத்தைக்கு வெளியே வந்து பஸ்சை நிறுத்தினார். சிதம்பரம், விருத்தாச்சலம், புவனகிரி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த பஸ்களிலிருந்து இறங்கிய சில பயணிகள் இந்த புதுச்சேரி பஸ்சில் ஏறினார் கள். பஸ்முழுவதுமாக நிரம்பியது. கண்டக்டர் ஓடி வந்து பஸ்சில் ஏறினார். ரைட்டு என்று கூறி விசில் அடித்தார். பஸ்வேகமாகசென்றது.
கண்ணாயிரம் புன்னகைத்தார். ஒரு பஸ்புறப்படுவதற்குள் இவ்வளவு கதை இருக்குதா. நாமதான்வெகுளியா இருக்கோம் என்று நினைத்துக்கொண்டார். பெட்ரோல்விலைஏறிபோச்சு, டீசல்விலை ஏறிபோச்சு, ஆட்டோசார்ஜ் கூடுனாகத்துறீங்க கூட பத்து ரூபாகொடுங்க என்று ஆட்டோடிரைவர் ஒருவர் பயணியிடம் வாக்குவாதம் செய்ததை கண்ணாயிரம் கேட்டார். ஒரு பஸ்நிறுத்தத்தில் நின்று பஸ்மீண்டும் சென்றது. அப்போது கண்ணாயிரம் தேடிவந்த நண்பர் சைக்கிளில் கஷ்டப்பட்டு அழுத்தி சென்றார். அதை பார்த்த கண்ணாயிரம் பஸ்சில் இருப்பதை மறந்து வெளியே கையைநீட்டி உரத்த குரலில் ஏ..சண்முகம் என்றார். அவரது நண்பர் இந்த குரலைகேட்டு அவசரமாக ரோட்டில் சைக்கிளைநிறுத்த முயன்று தட்டு தடுமாறி கீழேவிழுந்தார். யாருய்யா அவன் பெயரைச் சொல்லி கத்துனது என்று புலம்பியபடி கையில் ஏற்பட்ட காயத்தை தடவிக்கொண்டார். கண்ணாயிரம் அடடா.. நண்பனை பார்த்து பேசமுடியலையே. டிக்கெட் எடுக்காமல் இருந்திருந்தால் பஸ்சிலிருந்து இறங்கி இருக்கலாம். என்ன செய்வது என்று முணுமுணுத்தார். அட யாருய்யா கையை வெளியே நீட்டிக்கொண்டுவருவது . கையை உள்ளேஎடுய்யா என்றுகண்டக்டர் அலறினார். கண்ணாயிரம் நிலைமையை உணர்ந்து படக்கென்று கையைஉள்ளேஇழுத்தார். பஸ் ஆல்பேட்டை செக்போஸ்டை தாண்டிமுன்னேறியது. ஜன்னலோரத்தில் இருந்த கண்ணாயிரம் முகத்தில்வெயில் சுள் என்று அடித்தது. வெக்கைஇருக்கமுடியவில்லை. என்னடா புறப்படும்போதுவெயில் அடிக்காமல் இருந்தது. இப்போஎன்னசெய்யுறது. ஜன்னலோர சீட்டு என்று ஆசைப்பட்டுமாட்டிக்கொண்டோம். வேறு சீட்டு மாறி உட்கார வேண்டும். அப்பதான் கதை சரியாகவரும் என்று நினைத்துக்கொண்டார்.
பஸ் தவளக்குப்பம் வந்ததும் நிறையபேர் இறங்கினார்கள். அதிக சீட்டு காலியாக கிடந்தது.. கண்ணாயிரம் ஓடிபோய்நல்லசீட்டுபார்த்து உட்கார்ந்தார். அப்பாட பிரியா இருக்கு வெயில் அடிக்கல என்று சமாதானப்படுத்தி கொண்டார்.
கண்டக்டர் அவர் அருகில் அமர்ந்தார். என்ன அடிக்கடி கடலூர் வந்துட்டு போறீங்களா என்று கேட்டார் புன்னகையுடன். அதை கண்ணாயிரம் எதிர்பார்க்கவில்லை. ஆமா, ஆமா என்று தலையை ஆட்டினார். சிறிது சிரித்துவிட்டு நீங்க இதே வண்டியிலேதான் தொடர்ந்து வர்றீங்களாஎன்றார். அவர் இல்லை என்றார். கண்ணாயிரம் மெல்ல, ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி இருக்கு விசாரித்தார். கண்டக்டரும்அதை ஏன் கேட்கிறீங்க, பஸ்சிலே அதிக கூட்டம் இல்ல. பள்ளிக்கூடம் திறக்காததாலே ரொம்ப டல்லடிக்குது. பெட்ரோல், டீசலுக்கேகட்டுபடியாக மாட்டேங்குது. சும்மா கவுரத்துக்கு பஸ்சைஓட்டவேண்டியது இருக்கு. என்ன செய்யிறது என்று அலுத்துக்கொண்டார். கண்ணாயிரமும் உச்கொட்டினார். பஸ்வேகமாகசென்றது. இந்திராகாந்தி சிக்னல் வந்ததும்பலர் இறங்கினர். பார்த்து இறக்குங்கள். வண்டிவரும். என்று அன்பாக பயணிகளிடம் கண்டக்டர் கூறினார். இறங்க முடியாமல் தவித்த பாட்டியை கையைபிடித்து இறக்கிவிட்டார். ரோட்டை கடந்துஅவரைவிட்டுட்டு வந்தார். கண்ணாயிரம் அந்த கண்டக்டரை கனிவுடன்பார்த்தார். ஒருசில கண்டக்டர் நல்லவர்களாக இருக்காங்க என்றுநினைத்தார்.
பஸ் புதுச்சேரி பஸ்நிலையம் வந்து சேர்ந்தது. கண்ணாயிரம் அந்த கண்டக்டருக்குஒரு வணக்கம் செலுத்திவிட்டு கீழே இறங்கினார்.
செல்லாத பத்து ரூபாய் நோட்டைவீட்டுக்கு கொண்டுபோக முடியாது. எப்படியாவது மாற்ற வேண்டும் என்று டீக்கடையை நோக்கிநடந்தார். டீகுடித்துவிட்டு பத்து ரூபாயை நீட்டினார். டீக்கடைக்காரர் அந்த ரூபாயை பார்த்துவிட்டு இது செல்லாது. வேறு நோட்டு எடுங்க என்றார். கண்ணாயிரம் முயற்சிதோல்வி அடைந்ததை காட்டிக்கொள்ளாமல் அந்த ரூபாயை வாங்கிமேல்சட்டையில் வைத்தார். பின்னர் நூறு ரூபாயை எடுத்துகொடுத்தார்
டீக்கடைக்காரர் அதைப்பார்த்து என்ன சில்லறை இல்லையா என்று கேட்டார். கண்ணாயிரம் தலையை ஆட்டினார்.பின்னர் தொண்ணுறு ரூபாய் சில்லறையை முணங்கிக்கொண்டே எண்ணிக்கொடுத்தார். கண்ணாயிரம் அது நல்ல நோட்டுகளா என்று பார்த்துவிட்டு பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். செல்லாத பத்து ரூபாய் நோட்டை மாற்றவேண்டுமேஎன்று நினைத்து கொண்டிருந்தார். அவர் சில்லறை நோட்டைஎண்ணுவதை நோட்ட மிட்டிப்டாப் உடை அணிந்த ஒரு வாலிபர் அங்கு வந்தார். கண்ணாயிரத்தை பார்த்து சார், நூற ரூபாய்க்கு சில்லறை இருக்குதா என்று மெல்லிய குரலில் கேட்டார். டிப்டாப்உடையை பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு டேய் உஷார் என்றது மனசு. கடலூரில் பட்டதுபோதும் என்றது. ஆனால் அந்த வாலிபர் விடவில்லை. சார், பஸ்புறப்படப்போகுது. சில்லறை இல்லைன்னா கண்டக்டர் கத்துவார் சார் என்றார்.
சில்லறை என்றதும்கண்ணாயிரம் மனம் இறங்கினார். ஆமா அப்பா நானும் சில்லறை இல்லாமல் பஸ்சில் கஷ்டப்பட்டிருக்கேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நீங்க முதலில் நூறுரூபாய் குடுங்க. நான்சில்லறைதாரேன் என்றார். அந்த வாலிபர் முழுபுத்தம்புதுநூறுரூபாய் நோட்டை கொடுத்தார். கண்ணாயிரம்அந்த நோட்டுபுத்தம் புதிதாக கிழியாமல் இருந்ததால் வாங்கிமேல்சட்டை பையில்வைத்தார். அங்கிருந்த செல்லாதபத்துரூபாய் தட்டுப்பட்டது.கண்ணாயிரம் இதுதானே நேரம் தெரியாம செல்லாத நோட்டை தள்ளிவிடு என்றதுஒருமனசு. உடனேகண்ணாயிரம்பைக்குள் வைத்த தொண்ணுறு ரூபாய் எடுத்தார். மேல்சட்டைபையில் இருந்த செல்லாத பத்துரூபாய்நோட்டை இடையில் வைத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார். அவர்வாங்கிக்கொண்டு ரொம்ப தேங்க்ஸ் சார் என்று புறப்படதயாரானான். உடனே கண்ணாயிரம் நல்லாஎண்ணிப் பார்த்துக்கங்க சார். வெள்ளந்தியா இருக்காதீங்க என்றார். அதற்கு அந்த வாலிபர் நான் உங்களை நம்புறேன். உங்கமுகத்தை பார்த்தாலே தெரியும் சார்… சீ யூ டாடா என்றுகூறியவாறு சென்னை செல்லும் பஸ்சில் ஏறி அந்த வாலிபர் சென்றார்.
கண்ணாயிரத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்பாட செல்லாத பத்துரூபாய்நோட்டை தள்ளிவிட்டாச்சு என்று எண்ணியபடி வீட்டுக்கு நடந்தார். வீட்டுக்கு சென்றதும் அவர் மனைவி என்னங்க கடைக்கு போயிட்டுவர இவ்வளவு நேரமா. என்ன வாங்கிட்டுவந்தீங்க என்றுகேட்டார். கண்ணாயிரம் மெல்ல ஒண்ணும் வாங்கல நண்பனை பார்த்துட்டுவந்துடேன் என்றார். சரி காசை குடுங்க நான்போய்கடையில காய்கறி வாங்கிட்டுவரெரேன் என்றார்.
கண்ணாயிரம் பையில் இருந்தபுத்தம்புதுநூறு ரூபாய் நோட்டு மற்றும் சில்லறை முப்பது ரூபாய் சேர்த்து கொடுத்தார். அதை வாங்கி எண்ணிப்பார்த்த அவர் மனைவி என்னங்க இருநூறுரூபாய் கொடுத்தேன். நூற்றிமுப்பது ரூபாய்தான் இருக்கு என்றுகேட்டார். கண்ணாயிரம் உடனே ஓட்டலில்சாப்பிட்டேன் என்று ஏமாத்தினார். அப்போ மதியம் சாப்பாடு வேண்டாமா என்றார். கண்ணாயிரத்துக்கு வயிற்று பசி கிள்ளியது. அதை மறைத்து தலையை ஆட்டினார். ஏங்க அழுக்கான நோட்டைஎல்லாம் வாங்கிஇருக்கீங்க என்று கோபப்பட்டாள். உடனே கண்ணாயிரம், ஏன் அந்த நூறு ரூபாய்நோட்டு புதிதாக இருப்பது உன் கண்ணுக்கு படலையா என்று கேட்டார். அப்படியா என்றபடி அவர்மனைவி நூறு ரூபாய் நோட்டை பிரித்து பார்த்தார். அது ஒருமாதிரி இருந்தது. ஏங்க இதுநல்ல நோட்டுதானா பிரிண்டிங் பிரஸ்சில் அச்சடிச்சமாதிரி இருக்கு. இதை பாருங்க என்று படபடத்தாள். ஏய் மாசந்தோறும் புது புதுடிசைன்ல ரூபாய் நோட்டு அச்சடிச்சு விடுறாங்க. இது புதுடிசைன ரூபாயாக இருக்கும். நோட்டில்நூறு ரூபாய் என்று எண்ணில் எழுதி இருக்கா. கிழியாமல் புதுசா இருக்கா. விடு என்றார். அவர் மனைவிக்கு திருப்திஏற்படவில்லை.
கண்ணாயிரம் அவள் கவனத்தை திசை திருப்ப உனக்கு பிடித்த சீரியல்வரும் நேரமாச்சு என்று டிவியைஆன்செய்தார். நீயூஸ் ஓடிக்கொண்டிருந்தது. புதுச்சேரியில் கள்ள நோட்டு நடமாட்டம். பஸ்நிலையத்தில் கள்ளநோட்டை மாற்றிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீஸ் தேடிவருகின்றனர்.
மர்ம வாலிபர் புழக்கத்தில்விட்ட நூறு ரூபாய்நோட்டை பாருங்கள் என்று ஒருவர் கூறினார். பின்னர் அந்த நூறுரூபாய் கள்ள நோட்டை காட்டினார்கள். கண்ணாயிரத்தின் மனைவி தன்னிடம் உள்ள நூறு ரூபாய் நோட்டை ஒப்பிட்டு பார்த்தார். கள்ளநோட்டுஎன்பது உறுதியானது.
என்னங்க கண்ணாயிரத்தை தேடினார். கண்ணாயிரம் மயங்கிய நிலையில் இருந்தார்.

-தபசுகுமார், புதுச்சேரி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.