கொரோனா 3-வது அலை இப்போதே தொடங்கி இருக்கும்; எய்ம்ஸ் தலைவர் பேட்டி
1 min read
Corona 3rd wave is about to start; Interview with Ames President
19/6/2021
இந்தியாவின் கொரோனா 3-வது அலை இப்போதே தொடங்கி இருக்கும் என்றும், ஆனால் அது 6 முதல் 8 வாரங்களில் தெரிய ஆரம்பிக்கும் என்றும் எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா கூறினார்.
எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா என்.டி.டி.வி. க்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
3-வது அலைக்கு நெருக்கடி
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன.
இந்தச் சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை. முக கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்.
பாதிப்பு
இன்னும் 6 முதல் 8 வாரங்களில் இந்தியா மூன்றாவது அலையை எதிர்கொள்ளலாம். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சற்று காலமாகலாம். ஆனால் இப்போதிருந்தே அதன் பாதிப்பு ஆரம்பித்திருக்கும் என்று கருதுகிறேன். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாவிட்டால் நிச்சயமாக மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.