தமிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா; 102 பேர் சாவு
1 min read
Corona for 4,481 people in Tamil Nadu today; 102 deaths
1.7.2021
தமிழகத்தில் தமிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 102 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 41 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 50 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,84,177 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 2,546பேர் ஆண்கள், 1,935பேர் பெண்கள். இன்று 5,044 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர் இவர்களையும் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,13,930ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 102பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,721ஆக அதிகரித்து உள்ளது.
கோவையில் 498 பேருக்கும் ஈரோடில் 411 பேருக்கும், சென்னையில் 249 பேருக்கும், சேலத்தல் 279 பேருக்கும், தஞ்சாவூரில் 248 பேருக்கம், திருப்பூரில் 256 பேருக்கும், செங்கல்பட்டில் 198 பேருக்கும், நாமக்கல்லில் 144 பேருக்கும் கிருஷ்ணகிரியில் 103 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இறப்பு இல்லை. தென்காசியில் இன்று 29 பேர் பாதிக்கப்பட்ட நிலையல் ஒருவர் இறந்துள்ளார். தூத்துக்குடியில் 69 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இறப்பு இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.