June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா; 36 பேர் சாவு

1 min read
Corona for 2,652 people in Tamil Nadu today; 36 deaths
12.7.2021
 தமிழகத்தில் இன்று 2,652 கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 36 பேர் உயிரிழந்து உள்ளனர். 
 
தமிழகத்தில் கொரோனா

 தமிழகத்தில் கடந்த 52 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் 61 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
 இன்றைய கொரோனா பாதிப்பு பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
  தமிழகத்தில் 2,652 பேருக்கு கொரோனா உறுதியானது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,21,438 ஆக அதிகரித்து உள்ளது.
 இன்று கொரோனாவால் உறுதியானவர்களில் 1,518 பேர் ஆண்கள், 1,134 பேர் பெண்கள். 3,104 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,56,165 ஆக உயர்ந்துள்ளது.
 இன்று 36 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,454 ஆக அதிகரித்து உள்ளது. 
 கோவயைில் இன்று 290 பேருக்கும், ஈரோட்டில் 193 பேருக்கும், சேலத்தில் 170 பேருக்கும், தஞ்சையில் 191 பேருக்கும், சென்னையில் 165 பேருக்கும், திருப்பூரில் 157 பேருக்கும், செங்கல்பட்டில் 139 பேருக்கும், திருச்சியில் 103 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
 நெல்லையில் இன்று 16 பேருக்கும் தென்காசியில் 17 பேருக்கும், தூத்துக்குடியில் 42 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று இந்த 3 மாவட்டங்களில் இறப்பு இல்லை.
 இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.