மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைப்பு
1 min read
The Lok Sabha adjourned till 11 am tomorrow
22.7.2021
நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டவர். மக்களை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. ஆகஸ்டு 13-ந் தேதி வரை இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத் தொடரில் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், 3 நாட்களாக மக்களவை முடங்கியது.
ஒத்திவைப்பு
இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி நடந்தது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.
இதனை ஏற்காததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாடாளுமன்ற கூட்டம் கூடியபோது வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனை அடுத்து எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாளை வரை…
இந்த நிலையில் மதியம் கூடிய மக்களவை எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்