பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
1 min read
**EDS: TWITTER IMAGE RELEASED BY @PBNS_India, JAN. 11, 2020** Kolkata: Prime Minister Narendra Modi with West Bengal CM Mamata Banerjee during a meeting in Kolkata. (PTI Photo)(PTI1_11_2020_000097B)
Mamata Banerjee meets Prime Minister Modi
27.7.2021
மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளனார். அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று (ஜூலை 27) பிரதமர் மோடியை சந்தித்தார். பி
ரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மம்தா ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பிறகு மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கொரோனா விவகாரம், கூடுதல் தடுப்பூசிகள், மற்றும் மருத்துவத்துறை குறித்து ஆலோசித்தோம். மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்சினை குறித்து எழுப்பினேன். அது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்தார்.
பெகாசஸ் விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும். உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி
இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.