இந்தியாவில் மேலும் 43,509 பேருக்கு கொரோனா; 640 பேர் சாவு
1 min readCorona for a further 43,509 people in India; 640 deaths
29.7.2021
இந்தியாவில் மேலும் 43,509 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 640 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா 2-வது அலை
நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிர பாதிப்புகள் சற்று குறைந்து உள்ளன. இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இது நேற்றைய பாதிப்புகளை விட (43,654) சற்று குறைவாகும்.
இந்தியாவில் நேற்று 640 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 4,22,662 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 38,465 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து ஓராயிரத்து 612 ஆக உயர்ந்து உள்ளது. இதுவே நேற்று 3 கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 147 ஆக இருந்தது.
இதனால், குணமடைந்தோர் விகிதம் 97.38 சதவீதம் ஆக உள்ளது. கொரோனா பாதிப்புகளுக்கு 4 லட்சத்து 3 ஆயிரத்து 840 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஜூலை 29) காலை 8 மணி நிலவரப்படி 45.07 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 43,92,697 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலக பாதிப்பு
இன்று (ஜூலை 29-ம் தேதி) காலை 10 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 19 கோடியே 67 லட்சத்து 09 ஆயிரத்து 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 லட்சத்து 03 ஆயிரத்து 682 பேர் பலியாகினர். 17 கோடியே 81 லட்சத்து 21 ஆயிரத்து 406 பேர் மீண்டனர்.