June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,964 ஆக அதிகரிப்பு; 28 பேர் சாவு

1 min read

Corona exposure increases to 1,964 in Tamil Nadu; 28 deaths

11.7.2021
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,893-ல் இருந்து 1,964 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 1917 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று 1893 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைவிட இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,121பேர் ஆண்கள், 843 பேர் பெண்கள். இன்று 1,917 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,26,317 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,395 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை முதலிடம்

சென்னையை பொறுத்தவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை அதிகரித்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக இருந்த நிலையில் இன்று 243 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 229 பேருக்கும், ஈரோட்டில் 167 பேருக்கும், செங்கல்பட்டில் 140 பேருக்கும் திருவள்ளூரில் 98 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
நெல்லையில் இன்று 16 பேருக்கும், தூத்துக்குடியில் 18பேருக்கும், தென்காசியில் 7 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது. இந்த மூன்று மாவட்டங்களில் இன்று உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.