June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் நிதி உதவி இல்லை; ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் தேவையில்லை

1 min read

Not all housewives have financial assistance; No name change required on ration card

13.8.2021
பெண்களுக்கான நிதி உதவி பெற ரேஷன் கார்டில் பெயர் மாற்றத் தேவையில்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொருளாதார அடிப்படையில் தகுதியானவர்கள் கண்டறிந்த பின்னரே நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு நிதி

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி இதுபற்றி பரபரப்பாக பேசப்பட்டது. ரேஷன் கார்ட்டில் குடும்பத்தலைவி பெயர்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்று வதந்தி கிளம்பியது. இதனால் பலர் ரேஷன் கார்ட்டில் குடும்பத் தலைவியை முன்னிலைப்படுத்தி பெயர் மாற்றம் செய்தனர். இப்போது பெயர் மாற்றம் தேவை இல்லை என்று தமிழக பட்ஜெட்டில் விளக்கம் கூறப்பட்டது.
இதபற்றி பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவது மிக முக்கியமன திட்டம். குடும்ப தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி வழங்கப்படும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இல்லத்தரசிகளுக்கு உதவி வழங்குவதே நோக்கம். குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவையில்லை. ரூ.4ஆயிரம் நிதியுதவியை அரசு ஊழியர்கள், பணக்காரர்களுக்கு வழங்கக்கூடாது என விமர்சனம் எழுந்தது.

தகுதியானவர்கள்

ஏழை மக்களுக்கு அடிப்படை உரிமை தொகை செல்வதை உறுதி செய்யவே அளவுகோள் வகுக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிந்த பின்னரே ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பயிர்க்கடன்

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ஆராய்ந்த போது பல்வேறு குளறுபடிகள் நடந்தது தெரியவந்தது. சில மாவட்டங்களில் அறிவிப்பதற்கு முன்னரே அதிகளவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

2021 – 22ம் ஆண்டு திருத்த வரவு – செலவு திட்ட மதிப்பீடுகளில் நிதிப்பற்றாக்குறை ரூ.92,529.43 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.