June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா; 28 பேர் சாவு

1 min read

Corona for 1,851 people in Tamil Nadu today; 28 deaths

16.8.2021
தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 28 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

1,54,631 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு 1,851 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,896இல் இருந்து 1,851 ஆக குறைந்தது. சென்னையில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 12 வயதிற்குட்பட்ட 125 சிறுவர்களுக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில் இன்று 110 ஆக குறைந்துள்ளது.

28 பேர் சாவு

கொரோனாவல் மேலும் 28 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,547 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதிற்குட்பட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணைநோய்கள் ஏதும் இல்லாத 4 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 20,370 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,911 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,35,715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவை

கோவையில் 217, சென்னையில் 205, ஈரோட்டில் 170, தஞ்சாவூரில் 127, சேலத்தில் 123, செங்கல்பட்டில் 112 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லையில் 14 பேருக்கும் தென்காசியில் 9 பேருக்கும், தூத்துக்குடியில் 10 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.