நினைவுநாள்; வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
1 min read
Memorial Day; President, Prime Minister honored at Vajpayee Memorial
16/8/2021
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் , பிரதமர் மோடி மரியாதை செலுத்தினர். முன்னதாக பிரபல இசை கலைஞர்களின் இசையஞ்சலி நடந்தது.
வாஜ்பாய் நினைவு நாள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி மரணம் அடைந்தர். டெல்லியில் அவரது நினைவாக அடல் என்ற பெயரில் கடந்த ஆண்டு நினைிடம் அமைக்கப்பட்டது.
நேற்று நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக பிரபல இசை கலைஞர்களின் இசையஞ்சலி நடந்தது.
பல்வேறு சிறப்புகளை பெற்றவர்
மறைந்த பிரதமர் வாஜ்பாய் பல்வேறு சிறப்புகளை பெற்றவர். சொற்பொழிவாளர், சமூக சேவகர், கவிஞர், பத்திரிகையாளர், பார்லிமென்டேரியன், நேர்மையான அரசியல்வாதி, அனைவரையும் வசீகரிக்கும் வல்லமை, உயர் பதவியிலும் பரிசுத்தம் என பல்வேறு சிறப்புகளை உடையவர் வாஜ்பாய். ‘அடல்ஜி’என தொண்டர்களால் அழைக்கப்பட்ட வாஜ்பாய், பாரதீய ஜனதாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். பிரம்மச்சரிய வாழ்க்கையைக் கடைப்பிடித்த இவர், காந்திய சோஷலிசத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக திகழ்ந்தார். இவர் 1924-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி மத்திய பிரதேச மாநில் குவாலியரில் பிறந்தார். கான்பூரில் டி.ஏ.வி., கல்லுாரியில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பயின்றார்.
தங்க நாற்கர சாலை
1999-ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி மூன்றாவது முறை பிரதமரானர். அப்போது ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். கடந்த 1999ல் கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்தது இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. ‘தங்க நாற்கர சாலை’ திட்டத்தை அறிமுகப்படுத்தி, சாலை போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்.
ஊழல் கறைபடியாத உத்தமரான வாஜ்பாய் மறைந்து ஆண்டுகள் உருண்டாலும் அவர் என்றும் மக்கள் மனதில் நிற்பார்.