அனைவருக்கும் பொது மன்னிப்பு அறிவித்த தலிபான்கள்; அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு
1 min read
The Taliban announcing a general apology to all; Government employees ordered to return to work
17/8/2021
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், நாடு முழுவதுக்கும் பொது மன்னிப்பு வழங்கியதுடன், அரசு ஊழியர்கள் பயமின்றி பணிக்கு திரும்பலாம் என தெரிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால், மக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடைய முயற்சி செய்கின்றனர். பலர் வீடுகளுக்கு உள்ளேயே தங்கி உள்ளனர்.
தலிபான்களின் வெற்றியை அறிந்த அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர். பின்னர் அவர்கள் பணிக்கு திரும்பவில்லை.
பொதுமன்னிப்பு
இந்நிலையில் தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், “நாடு முழுவதும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அரசின் எந்த துறையிலும் பணியாற்றிய ஊழியர்கள் அல்லது அங்கமாக இருந்தவர்கள், தயக்கமின்றி பணியை தொடரலாம். பயமின்றி பணியில் நீடிக்கலாம்” எனக்கூறியுள்ளனர்.
சாலையில் நடனம்
காபூலில் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன. போக்குவரத்து காவலர் பணியில் ஈடுபட்டார். தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவர், பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. ஒரு சில பெண்களை சாலைகளில் நடமாடினர். ஆண்கள் மேற்கத்திய ஆடைகளை தவிர்த்துவிட்டு அந்நாட்டின் பாரம்பரிய ஆடைகளை அணிந்தனர்.