தமிழகத்தில் இன்று 1,797 பேருக்கு கொரோனா; 31 பேர் சாவு
1 min read
Corona for 1,797 people in Tamil Nadu today; 31 deaths
18.8.2021
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 1,797 ஆக குறைந்துள்ளது. 31 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,908 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழக கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,57,339 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1797பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,94,233 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,041பேர் ஆண்கள், 756 பேர் பெண்கள்.
இன்று 1,908 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,39,540 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 31 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,610 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக இருந்த நிலையில் இன்று(18ம் தேதி) 198 ஆக குறைந்துள்ளது.
கோவை
கோவையில் 210 பேருக்கும், சேலத்தில் 15 பேருக்கம், தஞ்சையில் 109 பேருக்கும், செங்கல்பட்டில் 108 பேருக்கும், சேலத்தில் 103 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் 15 பேருக்கும், தென்காசியல் 7 பேருக்கும், தூத்துக்குடியி் 13 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது