June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,604 பேருக்கு கொரோனா; 25 பேர் சாவு

1 min read

Corona for 1,604 people in Tamil Nadu today; 25 deaths

23.8.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,630 -ல் இருந்து 1,604 ஆக குறைந்துள்ளது. 25 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,863 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழக கொரோனா பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,53,068 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,604 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 918 பேர் ஆண்கள், 686 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 1,863 பேர் கொரோனாவால் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,48,868 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 25 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,734 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 177 ஆக இருந்த நிலையில் இன்று 172 ஆக குறைந்துள்ளது.

கோவையில் இன்று 195 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், தஞ்சையில் 104 பேருக்கும், செங்கல்பட்டில் 94 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் 11 பேருக்கும், தென்காசியில் தூத்துக்குடியில் 12 பேருக்கும், தென்காசியில் 7 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இறப்பு விவரம்

சென்னை, கோவை, தஞ்சை ஆகிய மாவட்டங்களி்ல் இன்று தலா 4 பேர் இறந்துள்ளனர். அரியலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் திருச்சி, திருவள்ளூர், திருவண்ணமாலை, மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.