தமிழ்நாட்டில் இன்று 1,509 பேருக்கு கொரோனா; 20 பேர் சாவு
1 min read
Corona for 1,509 people in Tamil Nadu today; 20 dead
1.9.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,512 -ல் இருந்து 1,509 ஆக சற்று குறைந்துள்ளது. 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் 1,54,718 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,தமிழகத்தை சேர்ந்த 1,508 பேர் மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு என மொத்தம் 1,509 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இதன் மூலம் கொரோனாடினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,16,381ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,24,72,641மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 858 பேர் ஆண்கள், 651 பேர் பெண்கள். இன்று 1,719 பேர் கொரோனாடில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,64,820ஆக உயர்ந்துள்ளது.
20 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்து உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 4 பேரும், சென்னை, கோவை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், சேலம், தஞ்சை, திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இன்று இறந்துள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 189 ஆக இருந்த நிலையில் இன்று (1ம் தேதி) 177ஆக குறைந்துள்ளது.
கோவையி்ல் 186 பேருக்கும், செங்கல்பட்டில் 114 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும் தஞ்சையில் 70 பேருக்கும், திருச்சியில் 73 பேருக்கும், திருப்பூரில் 72 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லைியல் 11 பேருக்கும், தென்காசியி் 11 பேருக்கும், தூத்துக்குடியில் 5 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது.