கேரள எல்லைகளை கண்காணிக்க மந்திரி அறிவுரை
1 min readMinister advises to monitor Kerala borders
1.9.2021
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஆலோசனை நடத்தினார்.
கேராளாவில் கொரோனா
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக அம்மாநிலத்தில் 173 பேர் வரையில் பலியாகி உள்ளனர். குணமடைந்தவரகளின் எண்ணிக்கை 21 ஆயிரமாக உள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 30.203 பேரில் இருந்து 32,800 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்து இரு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
எல்லைகள் கண்காணிப்பு
ஆலோசனையின் போது இரு மாநிலங்களும் கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.