June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

செம்மரம் வெட்ட சென்ற 5 சிறுவர்கள் உள்பட 21 தமிழர்கள் கைது

1 min read

செம்மரம் வெட்ட சென்ற 5 சிறுவர்கள் உள்பட 21 தமிழர்கள் கைது

3.9.2021

திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற 5 சிறுவர்கள் உள்பட 21 பேர் கைது
கைது செய்யப்பட்டனர். இந்த 21 பேரில் 18 வயதுக்குள்ளான 5 பேரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வாகன சோதனை

திருப்பதிக்கு வரும் வழியில் உள்ள ஆசஞ்சாரம்மா கோவில் அருகில் செம்மரக்கடத்தல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனிலிருந்த சிலர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

21 பேர் கைது

போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் 21 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து 10 கோடாரிகள், 12 செல்போன்கள், ரூ. 11 ஆயிரம் ரொக்கம், சமையலுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் செம்மரம் வெட்ட சென்றவர்கள் என்பது தெரியவந்தது. அமரேசன் என்பவர் அவர்களை அழைத்து வந்ததாக கூறினார்.

இதையடுத்து போலீசார் 21 பேரையும் கைது செய்தனர். அவர்களில் 18 வயதுக்குள்ளான 5 பேரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீசார் அனுப்பினர். மீதமுள்ள 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

கைதானவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.