July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு

1 min read

Corona for 1,697 people in Tamil Nadu today; 27 deaths

19.9.2021

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,653 ல் இருந்து 1,697 ஆக சற்று அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,594 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இது தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் 1,56,850 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் மட்டும் 1,696 பேருக்கும் கேரளாவிலிருந்து வந்த ஒருவரையும் சேர்த்து 1,697 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,004 பேர் ஆண்கள், 693 பேர் பெண்கள்.
தமிழகத்தில் இன்று 1,594 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,93,074 ஆக உயர்ந்துள்ளது.

27 பேர் சாவு

தமிழ்நாட்டில் இன்று 27 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 24 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,337 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக இருந்த நிலையில் இன்று (19ம் தேதி) 232 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் 215 பேருக்கும், ஈரோட்டில் 131 பேருக்கும், தஞ்சையில் 103 பேருக்கும், திருப்பூரில் 95 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 17 பேருக்கும், தென்காசியில் 7 பேருக்கும், தூத்துக்குடியில் 18 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.