June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 31,923 பேருக்கு கொரோனா; 27 பேர் சாவு

1 min read

Corona for 31,923 people in a single day in India; 27 deaths

23.9.2021

இந்தியாவில் மேலும் 31,923 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று 27 பேர் உயிரிழந்தனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 31 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று முன் தினம் 26,115 நேற்று 26,964 என பதிவான நிலையில் இன்று 31,923 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,35,31,498 லிருந்து 3,35,63,421 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 31,990 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,83,741 லிருந்து 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது.

282 பேர் சாவு

ஒரே நாளில் கொரோனாவுக்கு 282 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,768 லிருந்து 4,46,050 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,01,640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 83,39 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 71,38,205 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,35,08,265 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.