May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

1 min read

Four people, including a famous Dada, have been shot dead in a Delhi court complex

14.9.2021
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தாதா

அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி. இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் இன்று டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கொண்டுவரப்பட்டனர்.
அறை எண் 207ல் அவர்கள் சென்றபோது அவர்களை நோக்கி வக்கீல் உடையில் இருந்த கோகியின் எதிர்கோஷ்டியினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் எதிர்கோஷ்டியை நோக்கி சுட்டனர். அங்கு சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் கோகி உள்பட 4 பேர் பலியானார்கள்

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.