June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

லக்கிம்பூர் சம்பவ வீடியோ தெளிவாக்கி உள்ளது; நவடிக்கை எடுக்க வருண்காந்தி எம்.பி. கோரிக்கை

1 min read

The Lakhimpur incident video is clear; Varun Gandhi MP to take action Request

7.10.2021
லக்கிம்பூர் சம்பவ வீடியோ தெளிவாக்கி உள்ளது என்றும், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாரதீயஜனதா எம்.பி.யான வருண் காந்தி வெளியிட்டுள்ளார்.

வருண் காந்தி

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வெளியிட்டிருந்தது. அதனை காங்கிரஸ் எம்.பி.யான ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பகிர்ந்து கார் மோதிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கோரியும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பாரதீய ஜனதா எம்.பி.,யான வருண் காந்தி தெளிவான புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது:

தெளிவான வீடியோ

வீடியோ தெள்ளத் தெளிவாக உள்ளது. போராட்டக்காரர்களை கொலை செய்வதன் மூலம் அவர்களை அமைதியாக்க முடியாது. சிந்தப்பட்ட அப்பாவி விவசாயிகளின் ரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். வெளிப்பட்டுள்ள ஆணவம், கொடூரம் ஆகியவை விவசாயிகளின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.