இரணியல் அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய 5 பேர் கைது
1 min read
5 arrested for smuggling whale saliva near Iraniyal
8.10.2021
இரணியல் அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திமிங்கலம் உமிழ்நீர்
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அபூர்வமான மருத்துவக் குணங்கள் நிறைந்த வன உயிரின பொருட்கள் சட்ட விரோதமாக கடத்த முயற்சி நடப்பதாக இரணியல் இன்ஸ்பெக்டர் தங்கராஜிக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை அடுத்து சுங்கான் கடையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். எவ்வித அரசு அனுமதி இன்றி திமிங்கலத்தின் உமிழ்நீர் சுமார் 5 கிலோ அளவில் சட்ட விரோதமாக கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனை அடுத்து காரில் இருந்த செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது45), ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் (52), சென்னையை சேர்ந்த வரதராஜன் (40), திருவட்டார் பகுதியை சேர்ந்த சில்வெஸ்டர்(45), பொன்ராஜ் (60) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.