தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா; 20 பேர் சாவு
1 min read
Corona for 1,359 people in Tamil Nadu today; 20 dead
8.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,390 -ல் இருந்து 1,359 ஆக சற்று குறைந்துள்ளது. 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,473 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 1,43,355 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,359 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,75,592 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 770 பேர் ஆண்கள், 589 பேர் பெண்கள். இன்று 1,473 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,23,459 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,754 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக இருந்த நிலையில் இன்று 169 ஆக குறைந்துள்ளது.
கோவை
கோவையில் இன்று 140 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், ஈரோட்டில் 82 பேருக்கும், தஞ்சையில் 73 பேருக்கும் கொரோன தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
நெல்லையில் 17 பேருக்கும், தென்காசியல் ஒருவருக்கும், தூத்துக்குடியில் 23 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியபட்டது.