தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டில் பதுக்கி விற்ற 19 பேர் கைது
1 min read
19 arrested for selling liquor in Tenkasi district
13/10/2021
தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 19 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 350 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்கள் பதுக்கல்
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள், போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 19 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.