June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 16,862 பேருக்கு கொரோனா; 379 பேர் சாவு

1 min read

Corona for a further 16,862 in India; 379 deaths

15.10.2021
இந்தியாவில் மேலும் 16,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 18,862 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 19,391 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 37 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 678- ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 33 லட்சத்து 82 ஆயிரத்து 100- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 553 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சத்து 26 ஆயிரத்து 483 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.