தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா; 20 பேர் சாவு
1 min read
Corona for 1,170 people in Tamil Nadu today; 20 dead
20.10.2021
தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 20 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,948 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,418 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,40,627 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.