தமிழகத்தில் இன்று 1,164 பேருக்கு கொரோனா; 20 பேர் சாவு
1 min read
Corona for 1,164 people in Tamil Nadu today; 20 dead
21.10.2021
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,170 -ல் இருந்து 1,164 ஆக குறைந்துள்ளது. 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,412 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் 1,29,820 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,91,797 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 653 பேர் ஆண்கள், 511பேர் பெண்கள். தமிழகத்தில் இன்று 1,412 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,42,039 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 20 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் 15 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,968 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக இருந்த நிலையில் இன்று 152 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் 137 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும், ஈரோட்டில் 89 பேருக்கும் இன்று கொரோனா உறுதியானது.
நெல்லையில் 9 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.